டிச, 3 2024
காஞ்சிபுரம் லினக்ஸ் பயனர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து விடுபடுவதாக திரு. பரமேஸ்வர் அருணாச்சலம் அவர்கள் வாராந்திர கூட்டத்திலும் ,மடல் பட்டியலிலும் அறிவித்திருந்தார்.
நான் காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவில் இணைந்ததில் இருந்து பரமேஸ்வர் அவர்கள் சிறப்பாக வாராந்திர மற்றும் மாதாந்திர கூட்டத்தினை நடத்திவந்தார்.
வரும் வாரங்களில் அவரைப் போலவே சிறப்பாக வாரந்திர மற்றும் மாதாந்திர கூட்டங்களை நடத்தும் ஒருங்கிணைப்பாளராக நான் பொறுபேற்றுக்கொள்ள இருக்கிறேன்.
சில பொறுப்புகளை ஏற்று நடத்துதலில் நல்ல நிர்வாக திறனை பெறலாம். அப்படி நான் கற்பனவற்றையும் எழுதுகிறேன் வலைப்பதிவுகளாக…